Friday, March 29, 2013

உலகத்தின் கவனம் ஈர்ப்போம்!


ஈழம் தொடர்பான இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமே உண்டான போராட்டமாக வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தமிழ் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் நாமே இது பற்றி பேசி கொண்டிருப்பதால் நம் நியாயம் யார் காதையும் எட்டாமல் இருக்கிறது.

உலகமெங்கும் இருக்கும் மக்கள் இந்த போராட்டத்தை பற்றி பேச வைக்க வேண்டும். அதற்கு எனக்கு தோன்றும் யோசனை இந்த போராட்டத்தை ஒரு போராட்டமாக வைத்து கொண்டிருக்காமல் ஒரு கின்னஸ் சாதனையாக மாற்ற வேண்டும். நம் போராட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக மாறினால் உலக ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் கவனம் திருப்பும். அப்பொழுது நமக்கு நியாயம் கிடைப்பது மிக எளிதாக இருக்கும்.

நம் போராட்டத்தை ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றுவதற்கு எனக்கு தோன்றிய ஒரு வழி. தமிழகத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் டெல்லியை நோக்கி நடக்க துவங்குவது. 50 லட்சத்திலிருந்து 2 கோடி தமிழர்கள் டெல்லியில் அமைதியாக குவிய வேண்டும். கோஷம் போட வேண்டாம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவோம். இல்லையென்றால். பட்டினி கிடப்போம். ஆனால் உலக ஊடகங்கள் அனைத்தயும் நம் பக்கம் கவனம் ஈர்ப்போம். நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் வரை டெல்லியிலேயே இருப்போம். எந்த வன்முறையும் வேண்டும் எந்த சத்தமும் வேண்டாம். அமைதியாக ஆனால் அழுத்தமாக நாம் ஒரு உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அப்பொழுது தான் நம் பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் விவாதம் நடக்கும்.  உலகமெங்கும் விவாதம் நடந்தால் நம் நியாயங்கள் எல்லோருக்கும் புரிய துவங்கும்.

இதை எப்படி சாத்தியப்படுத்துவது?????????

No comments: